மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட “மவுசாக்கலை – சீட்டன்” பிரிவிற்கு செல்லும் பிரதான பாதையானது, பாடசாலை மாணவர்களுக்கும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் வாகன போக்குவரத்திற்கும் பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தியிருந்தது.
எனவே இப்பாதையின் அபிவிருத்தி தொடர்பாக மஸ்கெலியா பிரதேச சபை தவிசாளர் G.செண்பகவள்ளி ஊடாக மக்கள் எனது கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.
எனவே இப்பாதையானது தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின், 1.2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.