ஆதன வரி அறவிடல்

ஆதனவரி அறவிடும் நடைமுறை

1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தின் கீழ் ஏதேனும் ஒரு பிரதேசம் முன்னேற்றமடைந்த கிராமமாகப் பிரகடனப்படுத்தப்படும்போது ஆதன வரி அறவிடப்படும்.

ஆதனவரி செலுத்துவதற்கான தகைமை

தமது ஆதனங்கள் பிரதேச சபை அதிகார பிரதேசத்தில் முன்னேற்றமடைந்த பிரதேசத்தில் அமைந்திருக்கின்றபோது பின்வருமாறு உரித்தான காணியொன்றில் அல்லது கட்டிடமொன்றில் குடியிருப்பாளராக இருத்தல்.

  • பிரதேச சபை எல்லைக்குள் அசையா சொத்துக்களின் உரிமையாளராக இருத்தல்.
  • பிரதேச சபை எல்லைக்குள் அமைந்துள்ள வீடொன்றில் கட்டிடமொன்றில் அல்லது காணியொன்றில் வாடகைக்கு இருத்தல்.
  • பிரதேச சபை எல்லைக்குள் அமைந்துள்ள அரசாங்கத்துக்கு உரிய வீடொன்றில், கட்டிடமொன்றில் அல்லது காணியொன்றின் உரிமையாளராக இருத்தல்.
  • பிரதேச சபை எல்லைக்குள் அமைந்துள்ள அசையா சொத்துக்களின் பங்கு உரிமையாளராக (சம பங்;கு உரிமையாளர்) இருத்தல்.

இதன்போது,

 தமது சொத்தின் மதிப்பிடப்பட்ட மதிப்பிலிருந்து,

மஸ்கெலியா13%
அப்கட்12%

வரி செலுத்த வேண்டும்

  • குறித்த வருடத்தின் முதல் மாதத்தில் ஆதன வரி செலுத்தும் போது 10மூ கழிவு உரிமையாளருக்குக் கிடைக்கும். குறித்த திகதியில் நிலுவை தொகை எதுவும் இருக்கக்கூடாது.
  • குறித்த ஆண்டில் 4 காலாண்டுக்கு, காலாண்டு காலாண்டாகவும் கூட ஆதனவரியைச் செலுத்த முடியும்.
  •  ஆதனவரி நடைமுறைப்படுத்தப்படுகின்ற பிரதேசத்தில் காணி பகுதியொன்றை கொள்வனவு செய்கின்ற ஒருவர் அதற்கான புதிய ஆதனவரி இலக்கமொன்றை பெற்றுக்கொள்ள வேண்டும். (உறுதி சுருக்கமொன்றைச் சமர்ப்பிப்பதன் மூலம்)
  • தற்பொழுது ஆதன வரி இலக்கம் உள்ள ஒருவரின் முழு சொத்தையும் பொறுப்பேற்கின்ற ஒருவர் எனில் உறுதி சுருக்கமொன்றை சமர்ப்பித்து பிரதேச சபை ஆதன வரி பதிவேட்டில் தமது பெயரைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • ஆதனவரி பதிவேட்டில் பெயரைத் திருத்துவதற்கு அல்லது புதிய ஆதனவரி இலக்கமொன்றை பெற்றுக் கொள்வதற்கு உரிய உறுதி சுருக்கப் படிவத்தை கட்டணம் செலுத்தி பிரதேச சபை அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். ( குடியிருப்பு கட்டிடங்களுக்கு ரூ.500 வணிக கட்டிடங்களுக்கு ரூ.1000)
  • அந்த உறுதி சுருக்க படிவத்தை தமது உறுதியைச் சமர்ப்பித்து நொத்தாரிஸ் ஒருவரைக் கொண்டு நிரப்பி சான்றுப்படுத்த வேண்டும்.
  • அவ்வாறு நிரப்பிக்கொண்ட படிவத்தை அதன் பிரதியொன்றுடன் நில அளவை வரைபடத்தின் 2 பிரதிகளுடன் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  • அப்பொழுது உங்கள் பெயர் ஆதன வரி செலுத்துபவராக பதியப்படும்.

நபரொருவர் ஆதன வரியினை செலுத்தாவிடில், குறித்த நபருக்கு குறிப்பிட்ட சொத்தானது உரித்து இல்லை என செயலாளரினால் உரிமம் இல்லை என பத்திரமொன்று வழங்கப்படும். தவிசாளரினால் அதிகாரம் வழங்கப்பட்ட உத்தியோகத்தரினால் வரி செலுத்தப்படாத சொத்து பொது ஏலத்தில் விற்கப்பட்டு மதிப்பிடப்பட்ட வரி வசூலிக்கப்படும். (1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபை கட்டளை சட்டத்தின் 162 வது பிரிவு).

அசையும் சொத்து தடை செய்யப்படாத நிலையில் குறிப்பிட்ட சொத்து குறித்து சபையின் செயலாளரினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை சபையின் ஆதன வரி பிரிவிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

தற்பொழுது ஆதன வரி அறவிடுகின்ற பிரிவுகள்.

  • மஸ்கெலியா
  • சாமிமலை

Public Library – வாசகர் சுயதொழில் விழிப்புணர்வு செயற்றிட்டம் மற்றும் பெண்களை ஊக்குவிக்கும் நிகழ்வு

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மஸ்கெலியா பிரதேச சபையின் கீழ் இயங்கும் மஸ்கெலியா பொது நூலகம் மற்றும் சாமிமலை வாசிகசாலை இணைந்து நடாத்திய நூலக வாசகர் சுயதொழில் விழிப்புணர்வு செயற்றிட்டம் மற்றும் பெண்களை ஊக்குவிக்கும் நிகழ்வு 2022.08.26 அன்று கௌரவ தவிசாளர் G.செண்பகவள்ளி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் வருகை தந்து சுயதொழில் தொடர்பாக விழிப்புணர்வு செயலமர்வினை நடாத்தினர். குறித்த செயலமர்வில் சுயதொழில் ஒன்றினை ஆரம்பித்தல் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்விற்கு மஸ்கெலியா பிரதேச சபையின் கௌரவ தவிசாளர், செயலாளர், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச சபையின் அலுவலக உத்தியோகத்தர்கள், நூலக அங்கத்தவர்கள் மற்றும் சுயதொழில் மேற்கொள்ளலில் ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
அத்துடன் பொது நூலக கற்றல் வள மத்திய நிலையத்தில் கணணி பாடநெறியினை பூர்த்தி செய்த நூலக அங்கத்தவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ජාතික කියවීම් මාසය වෙනුවෙන් මස්කෙළිය ප්‍රාදේශීය සභාව යටතේ පවත්වාගෙන යනු ලබන මස්කෙළිය මහජන පුස්තකාලය හා අප්කට් කියවීම් ශාලාව එක්ව සංවිධානය කරනු ලැබු පුස්තකාල සාමාජිකයන් සදහා ස්වයං රැකියා පිළිබද දැනුවත් කිරීමේ වැඩසටහන හා කාන්තා සවිබල ගැන්වීමේ වැඩසටහන 2022.08.26 වන දින ගරු සභාපතිනි ජී.සෙන්බගවල්ලි මැතිතුමියගේ ප්‍රධානත්වයෙන් පැවැත්විණි.
ස්වයං රැකියාවක් ආරම්භ කිරීම සම්බන්ධයෙන් මෙහි පැමිණි සිටි ජාතික ව්‍යවසාය සංවර්ධන අධිකාරියේ නිලධාරීන් විසින් දැනුවත් කරන ලදී.
මෙම වැඩසටහන සදහා මස්කෙළිය ප්‍රාදේශීය සභාවේ ගරු සභාපතිනි ජී.සෙන්බගවල්ලි මැතිතුමිය, ලේකම්තුමා, ප්‍රජා සංවර්ධන නිලධාරීතුමා, කාර්ය මණ්ඩලය, පුස්තකාල සාමාජිකයන් සහ ස්වයං රැකියා සම්බන්ධයෙන් උනන්දුවක් දක්වන පිරිස සහභාගී විය.
එසේම මස්කෙළිය මහජන පුස්තකාලයේ ඉගෙනුම් සම්පත් මධ්‍යස්ථානයේ තොරතුරු තාක්ෂණ පාඨමාලාව නිම කල සිසුන් සදහා සහතික පත්‍ර ප්‍රධානය කිරීමද මෙහිදී සිදු විය.